நல்லதை நினையுங்கள்; நல்லதே நடக்கும்
30.பிழைதிருத்தம்
தவறுக்கு எல்லாம்
தண்டனைகள் தான்
தீர்ப்புகள் என்றும்
தீர்வுகள் என்றும்
தீர்மானம் செய்து விடாதீர்கள்.
திருந்துவதற்கும்
தவணை
தாருங்கள்
வழங்கப்படும்
வாய்ப்புகள் எல்லாம்
வருத்துவதற்கு மட்டுமல்ல
திருத்துவதற்கும் தான்
என எண்ணிக் கொள்ளுங்கள்
Labels: தண்டணை, தப்பு, தவறு, பிழை, வாய்ப்பு
அன்புடன் திகழ் at 1:24 PM
< < முகப்பு