நல்லதை நினையுங்கள்; நல்லதே நடக்கும்
24.கீதை சொல்லும் செய்தி
உடல் எனும் தேரில்
ஊர்வலம் செல்லும்
உயிர்ப்பொருள்
புலன் எனும்
பரியின் பிடியைப்
பரம்பொருளிடம் ஒப்படைத்துவிட்டால்
பயமற்ற
பயணமற்ற
பாதை அமையும் எனும்
பாடத்தைப் போதிப்பது தான்
கீதை சொல்லும் செய்தி
உயிர்ப்பொருள் - ஜீவாத்மா
பரம்பொருள் - பரமாத்மா
பயணமற்ற - ஜனனமற்ற
பரி - குதிரை
மொழியாக்கம்
Labels: உடல், கீதை, குதிரை, பயணம், பயம், பரமாத்மா, பரம்பொருள், பரி, புலன், ஜீவாத்மா
அன்புடன் தமிழ் at 9:00 PM
23.கேள்விக்கணைகள்
அடுத்தவர் மேல்
அம்புக்கணைகளை
அள்ளி வீசும் முன்
உங்கள்
உள்ளங்களை, கொஞ்சம்
உரசிப் பாருங்கள். நீங்களே
உணர்ந்துக் கொள்வீர்கள்
அது தங்கம்
அல்ல என்று
Labels: அகம், அம்புக்கணை, உள்ளம், கேள்வி, தங்கம்
அன்புடன் தமிழ் at 7:49 PM
22.வாழ்க்கை
வாழ்க்கை ஒரு
வானவில், அதில்
துன்பச்சுடரும்
இன்பமழையும்
இல்லாமல்
வண்ணங்கள் என்ற
நிகழ்வுகள்
தோன்றமுடியாது.
மொழியாக்கம்
Labels: இன்பம், ஒளி, துன்பம், நிகழ்வு, மழை, வண்ணம், வாழ்க்கை, வானவில்
அன்புடன் தமிழ் at 10:51 AM