நல்லதை நினையுங்கள்; நல்லதே நடக்கும்
24.கீதை சொல்லும் செய்தி
உடல் எனும் தேரில்
ஊர்வலம் செல்லும்
உயிர்ப்பொருள்
புலன் எனும்
பரியின் பிடியைப்
பரம்பொருளிடம் ஒப்படைத்துவிட்டால்
பயமற்ற
பயணமற்ற
பாதை அமையும் எனும்
பாடத்தைப் போதிப்பது தான்
கீதை சொல்லும் செய்தி
உயிர்ப்பொருள் - ஜீவாத்மா
பரம்பொருள் - பரமாத்மா
பயணமற்ற - ஜனனமற்ற
பரி - குதிரை
மொழியாக்கம்
Labels: உடல், கீதை, குதிரை, பயணம், பயம், பரமாத்மா, பரம்பொருள், பரி, புலன், ஜீவாத்மா
அன்புடன் தமிழ் at 9:00 PM
< < முகப்பு