நல்லதை நினையுங்கள்; நல்லதே நடக்கும்
17.எண்ணங்கள்

![]()
எண்ணங்களே நம்
ஏற்றங்களுக்கு ஏணி
எழிச்சி வேண்டுமெனில்
எதையும் தியாகம் செய்யாமல்
எட்டி விடமுடியாது.
ஏளனம் ஏராளம் வரலாம்
ஏமாற்றம் நம்மை ஏப்பமிடலாம்
எதிர்நீச்சல் உன்னில் இருந்தால்
ஏட்டையும் மாற்றிவிடலாம்
![]()
Labels: எண்ணம், எதிர்நீச்சல், எழிச்சி, ஏமாற்றம், ஏளனம், ஏற்றம், தியாகம்
அன்புடன்
தமிழ் at
3:50 PM

16.கண்ணீர்


கண்ணீர் என்பது
கண்ணிலிருந்து விழுந்து
கன்னத்தை நனைப்பதல்ல,
இதயத்திலிருந்து வடிந்து
உள்ளத்தை உணர்த்துவது.

மொழியாக்கம்
Labels: அகம், இதயம், உள்ளம், கண், கண்ணீர், கன்னம்
அன்புடன்
தமிழ் at
1:53 PM

15.நம்பிக்கை


நாளைய
நம்பிக்கை என்பது
இன்றைய வாழ்க்கையின்
இதயத்துடிப்பை போன்றது.

Labels: இதயத்துடிப்பு, நம்பிக்கை, நாளை, வாழ்க்கை
அன்புடன்
தமிழ் at
9:15 PM

14.முடியும்


முடியும் என்பது
முன்னேறத்துடிப்பவரின்
முதல் வார்த்தை மட்டுமல்ல
முடிவும்,
மூச்சும் அது தான்.

Labels: துடிப்பு, நம்பிக்கை, முடியும், முடிவு, முன்னேற்றம், மூச்சு, வாழ்க்கை
அன்புடன்
தமிழ் at
10:24 AM

13.கனவும் நனவும்


கனவு
காணுங்கள்,ஆனால்
நனவாக
நாளும் உழையுங்கள்.

Labels: உழைப்பு, கனவு, நனவு, நாள்
அன்புடன்
தமிழ் at
12:47 PM



